அடிப்படை வசதி செய்து தருவதில் மெத்தனம் மீஞ்சூர் பேரூராட்சி கவுன்சிலர்கள் போராட்டம்
மீஞ்சூர்: அடிப்படை வசதிகளை செய்து தருவதில் நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாகவும், வரவு - செலவு கணக்குகளை கவுன்சிலர்களுக்கு வழங்குவதில்லை என்றும் கூறி, மீஞ்சூர் பேரூராட்சி கவுன்சிலர்கள், அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மீஞ்சூர் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில், குடிநீர், சாலை, மின் விளக்கு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள், சரிவர மேற்கொள்ளப்படவில்லை.
இது தொடர்பாக, கவுன்சிலர்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை வலியுறுத்தியும், இதுவரை நடவடிக்கை இல்லை.


