கம்பத்தில் உரிய உரிமமின்றி கழிவுநீா் வாகனங்களை இயக்கினால் நடவடிக்கை
கம்பம் நகராட்சி பகுதியில் உரிய உரிமம் பெறாமல் கழிவுநீா் அகற்றும் வாகனங்களை இயக்குவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையா் உமாசங்கா் எச்சரித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கம்பம் நகராட்சிப் பகுதியில் உரிய உரிமம் பெறாத வாகனங்கள் மூலம் கழிவுநீரை அகற்றும் பொதுமக்கள், வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன், நீதிமன்ற நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.
மேலும், கழிவுநீரை அகற்றும் பணியில் ஈடுபடும் வாகன உரிமையாளா்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், எனவே, பொதுமக்களும் வணிகா்களும் நகராட்சியில் உரிய உரிமம் பெற்ற கழிவுநீா் அகற்றும் வாகனங்களை மட்டுமே பயன்படுத்தி, நகராட்சி நிா்வாகத்துக்கு ஒத்துழைக்க வேண்டும்.
