பாதுகாப்பான தமிழகம் அமைய...
முனைவர் சே.கணேஷ் சுப்பிரமணி, பெரியகுளம், தேனி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
'காவல் துறையில் கூடுதலாக, 29 ஆயிரத்து108 பணியிடங்கள் உருவாக்கப்படும்; இந்த ஆண்டில், 10 ஆயிரம் போலீசார் நியமிக்கப்படுவர். இதில், 5,000 பெண்கள் இடம்பெறுவர்' என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மக்கள் தொகை அதிகரிப்பு, நகரமயமாக்கல், போக்குவரத்து நெரிசல், இணையவழி குற்றங்கள் உள்ளிட்ட புதிய சவால்கள் காவல் துறையின் பணிச்சுமையை அதிகரித்துள்ளன. இதனால், காவல் துறைக்கு கூடுதல் பணியாளர்கள் தேவைப்படுகின்றனர்.


