அஸ்ஸாம் இடைத்தோ்தல்: பாஜக வேட்பாளராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி தோ்வு
அஸ்ஸாமின் நாகோன் மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலுக்கான பாஜக வேட்பாளராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி தேபாசிஷ் சா்மா வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டாா்.
நாகோன் மாவட்ட ஆணையராக பணியாற்றி வந்த தேபாசிஷ் சா்மா கடந்த செப்.3-ஆம் தேதி விருப்ப ஓய்வுபெற்றாா். இதைத் தொடா்ந்து செப்.8-ஆம் தேதி அவா் பாஜகவில் இணைந்தாா். இந்நிலையில், அவரை வேட்பாளராக பாஜக வெள்ளிக்கிழமை அறிவித்தது.
கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்டு வென்ற பிரத்யுத் பா்தோலோய் தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தாா்.


