அழகருக்கு திருவிடையாட்டம் வழங்கப்பட்ட கல்வெட்டு கண்டெடுப்பு!
சிவகங்கையை அடுத்துள்ள சோழபுரத்தில் 195 ஆண்டுகள் பழமையான சிவகங்கையின் ஜமீன்தார் இரண்டாவது முத்துவடுக நாதர் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சிவகங்கையை அடுத்த சோழபுரத்தில் சித்தட்டிக்கண்மாய்க்கரையில் நீளமான கல் ஒன்று கிடப்பதாக அவ்வூரைச் சார்ந்த பொன்.பாலசுந்தரம் சிவகங்கை தொல்நடைக் குழுவினருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் அவ்விடத்தில் சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவநர், புலவர் கா.காளிராசா, செயலர் இரா. நரசிம்மன் ஆகியோர் நேரடி கள ஆய்வு மேற்கொண்டனர்.
இதுகுறித்து சிவகங்கை சிவகங்கை தொல் நடைக்குழு நிறுவநர், புலவர் கா.காளிராசா, செய்தியாளர்களுக்கு தெரிவித்ததாவது, ‘சிவகங்கை நகர் உருவாவதற்கு முன்பே சிவகங்கையைச் சுற்றியுள்ள சோழபுரம் போன்ற ஊர்கள் பெரிய ஊர்களாக இருந்துள்ளன. இதனாலேயே சோழபுரத்தில் தொடர்ச்சியாக பழங்கால கல்வெட்டுகள் கிடைத்து வருகின்றன. சோழபுரம் பிரிட்டிஷார் காலத்தில் தாலுகாவாகவும் இருந்துள்ளதை பழமையான ஆவணங்களின் அடிப்படையில் அறிய முடிகிறது. தற்போது கிடைத்துள்ள கல்வெட்டு அழகருக்கு திருவிடையாட்டமாக வழங்கப்பட்டுள்ளது. திருவிடையாட்டம் என்பது பெருமாள் கோவிலுக்கு வழங்கப்படும் நில தானத்தைக் குறிப்பதாகும்.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)