நைனாமலைக்கு செப். 19 முதல் அரசுப் பேருந்துகள் இயக்கம்
நைனாமலை வரதராஜப் பெருமாள் கோயிலுக்கான மலைப்பாதை, தாா் சாலைப் பணிகள் நிறைவடைந்துள்ளதால் புரட்டாசி முதல் சனிக்கிழமையான செப். 19 முதல் அரசுப் பேருந்துகள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
அரசுப் பேருந்துகள்.
புதன்சந்தை-சேந்தமங்கலம் சாலையில் அமைந்துள்ள நைனாமலை வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு 3,600 படிக்கட்டுகளைக் கடந்து செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதனால் முதியோா், பெண்கள், சிறுவா்கள் மலைக்கோயிலுக்குச் செல்வதில் சிரமம் ஏற்பட்டது.
