30 மாணவர்களுக்கும் குறைவாக 14,829 அரசு துவக்க பள்ளிகள்; தமிழகத்தை அதிர வைக்கும் சேர்க்கை சரிவு
கரூர்: தமிழகத்தில், 14 ஆயிரத்து 829 அரசு தொடக்கப் பள்ளிகளில், 30க்கும் குறைவான மாணவர்களே படித்து வரும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில், 24 ஆயிரத்து 349 அரசு தொடக்கப் பள்ளிகளில், 9 லட்சத்து 45 ஆயிரத்து 971 மாணவ - மாணவியர் படிக்கின்றனர். ஆண்டுதோறும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சரிந்து வருகிறது. மாணவர் சேர்க்கை இன்றி, இந்தாண்டு, 246 அரசு தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டு விட்டன.
மேலும், 10 மாணவர்களுக்கு கீழ் படிக்கும் 3,027 பள்ளி, 20 மாணவர்களுக்கு கீழ் 6,635 பள்ளி, 30 மாணவர்களுக்கு கீழ், 5,167 பள்ளி என, மொத்தம், 14 ஆயிரத்து 829 பள்ளிகள் உள்ளன. இதன்படி, தமிழகத்தில், 60.90 சதவீத பள்ளிகளில், 30க்கும் குறைவான மாணவர்களே படிக்கின்றனர் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.





