சொட்டுநீர் பாசனத்தில் மரவள்ளி சாகுபடி
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பகுதியில் சொட்டுநீர் பாசனத்தில் மரவள்ளி சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி பகுதியில் பருவ மழையின் துவக்கத்தில் கரும்பு, நெல், மக்காசோளம் உள்ளிட்ட நீண்ட கால பயிர்களும், வறட்சி காலங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறையும்போது குறுகிய கால பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது.
கோமுகி, மணிமுக்தா ஆகிய இரு அணைகள் மற்றும் ஏரிகளின் நீராதாரம் மூலம் கரும்பு மற்றும் நெற்பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.


