சாட்டிலைட் ரிங் ரோட்டில் சர்வீஸ் சாலை; ரூ.198 கோடிக்கு மத்திய அரசு டெண்டர்
ஓசூர்: தமிழக எல்லை வழியாக செல்லும் சாட்டிலைட் டவுன் ரிங் ரோட்டில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு சர்வீஸ் சாலை அமைக்க டெண்டர் விட்டுள்ளது.
கர்நாடகா - தமிழகம் இடையே சாட்டிலைட் டவுன் ரிங் ரோடு அமைக்கப்படுகிறது. தமிழக எல்லையில் உள்ள, 25 கிராமங்கள் வழியாக, 45 கி.மீ., துாரம் சாலை செல்கிறது. வழக்கமாக தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்படுவது போல, சர்வீஸ் சாலை அமைக்கப்படாது என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் சாலையோர விவசாய நிலங்களிலிருந்து, விளை பொருட்களை எடுத்து செல்ல முடியாத நிலை உருவானது. எனவே, சர்வீஸ் சாலை அமைத்து தர, மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம், ஓசூர் பகுதி விவசாயிகள் வலியுறுத்தினர். அவரும் சர்வீஸ் சாலை அமைக்கப்படும் என உறுதியளித்திருந்தார். ஆனால் சர்வீஸ் சாலைக்கு, நிதி ஒதுக்கி டெண்டர் விடாமல் காலம் தாழ்த்தப்பட்டது.


