விமானத்தில் பள்ளி சிறார்களை சுற்றுலா அனுப்பிய சமூக சேவகர்
பெங்களூரு: அரசு பள்ளி மற்றும் ஆதரவற்றோர் ஆசிரமத்தின், 200க்கும் மேற்பட்ட சிறார்கள், விமானத்தில் மும்பைக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
பெங்களூரு ரூரல் மாவட்டம், தேவனஹள்ளி தாலுகாவை சேர்ந்த சமூக சேவகர் கிரீஷ். இவர் பள்ளி சிறார்களுக்கு, தன் செலவில் சுற்றுலா ஏற்பாடு செய்துள்ளார்.
தேவனஹள்ளியின், மல்லேபுரா அரசு தொடக்க பள்ளி சிறார்கள் மற்றும் பல்வேறு ஆதரவற்றோர் ஆசிரமத்தின், 200க்கும் மேற்பட்ட சிறார்கள், அவர்களின் பெற்றோரும், கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, விமானத்தில் நேற்று புறப்பட்டனர்.