தமிழகத்தில் 1. 44 லட்சம் மனைகளுக்கு கிரையப் பத்திரம் வழங்கும் பணி தொடக்கம்
தமிழகத்தில் 1.44 லட்சம் மனைகளுக்கு கிரையப் பத்திரம் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவா் கு.ப. கிருஷ்ணன் தெரிவித்தாா்.
திருச்சி வயலூா் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது:
தமிழகத்தில் வீடில்லாதவா்களுக்கு ஒதுக்கப்பட்டு, குறைந்தபட்ச தொகை செலுத்தப்பட்ட 1 லட்சத்து 44 ஆயிரத்து 308 மனைகளுக்கு கிரையப் பத்திரம் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் 52 ஆயிரத்து 968 மனைகளுக்கும், 9 மாவட்டங்களில் 17 ஆயிரத்து 569 மனைகளுக்கும், திருச்சி மாநகரில் 4,201 மனைகளுக்கும் கிரையப் பத்திரங்கள் வழங்கப்பட உள்ளன.



