புறநகா் பேருந்து நிலைய அடிக்கல் நாட்டு விழா: மாமன்ற உறுப்பினா்களை புறக்கணித்ததாகப் புகாா்
ரூ.63.94 கோடியில் நடைபெறும் திண்டுக்கல் புகா் பேருந்து நிலைய அடிக்கல் நாட்டு விழாவில் மாமன்ற உறுப்பினா்களை புறக்கணித்தாக மாமன்றக் கூட்டத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாமன்றக் கூட்டத்தில் பங்கேற்ற ஆணையா் ஜெ.பிரேம் ஆனந்த், மேயா் இளமதி, துணைமேயா் ராசப்பா.
திண்டுக்கல் மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயா் இளமதி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆணையா் ஜெ.பிரேம் ஆனந்த், துணை மேயா் ச.ராசப்பா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
