உத்தரபிரதேசம்: ரூ.70 கோடி கள்ள நாணயங்களை புழக்கத்தில் விட்ட கும்பல் சிக்கியது
லக்னோ,உத்தரபிரதேச மாநிலத்தில் ரூ.70 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள கள்ள 20 ரூபாய் நாணயங்களை தயாரித்து சந்தையில் புழக்கத்தில் விட்ட கும்பலை போலீசார் கைது செய்துள்
உத்தரபிரதேச மாநிலத்தில் ரூ.70 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள கள்ள 20 ரூபாய் நாணயங்களை தயாரித்து சந்தையில் புழக்கத்தில் விட்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து மூட்டை மூட்டையாக கள்ள நாணயங்கள் மற்றும் எந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
உத்தரபிரதேச மாநிலத்தில் 20 ரூபாய் கள்ள நாணயங்கள் அதிகளவில் புழக்கத்தில் இருப்பதாக போலீசாருக்கு அடுத்தடுத்து புகார்கள் வந்தன. இதையடுத்து, கள்ள நோட்டு மற்றும் நாணயங்களை ஒழிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். போலீசாரின் விசாரணையில், ஒரு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் 5 பேரை கைது செய்தனர்.
கைதான கும்பலிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாயின. இவர்கள் இரும்பு மற்றும் துத்தநாக தகடுகளில் இருந்து நாணயங்களின் அடிப்பாகங்களை உரு வார்ப்பாக செய்துள்ளனர். பின்னர், அவற்றின் மீது பித்தளையை பூசி, அதிநவீன அச்சுகள் மற்றும் எந்திரங்களை பயன்படுத்தி அசல் நாணயம் எது, போலி நாணயம் எது என்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு அச்சு அசலாக வடிவமைத்துள்ளது தெரியவந்தது.
