கடலில் மூழ்கி இறந்த மாணவர்கள் குடும்பத்திற்கு த.வெ.க., நிதியுதவி
கோட்டக்குப்பம்: சின்ன முதலியார்சாவடியில் கடலில் மூழ்கி இறந்த 2 பள்ளி மாணவர்களின் குடும்பத்தினருக்கு, கோட்டக்குப்பம் நகர த.வெ.க., சார்பில் நிவாரண உதவித் தொகை வழங்கப்பட்டது.
கோட்டக்குப்பம் அடுத்த சின்ன முதலியார்சாவடியைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்கள் பிரதீஷ், 15; சசிதரன், 15; இருவரும் சில தினங்களுக்கு முன் கடலில் குளித்த போது மூழ்கி இறந்தனர்.
மகன்களை பிரிந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு, கோட்டக்குப்பம் நகர த.வெ.க., சா்பில் ஆறுதல் கூறப்பட்டது. அப்போது, தொழிலதிபர் தொள்ளாமூர் கண்ணன், அந்த குடும்பத்தினருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவித்தொகை வழங்கி ஆறுதல் கூறினார்.