நல்லாசிரியை பிரபாவதி
- நமது நிருபர் -: 'இலக்கிய அன்னை' என்று அழைக்கப்படும் சாவித்திரிபாய் புலேவை, தனது உத்வேகமாகவும், முன்மாதிரியாகவும் கொண்ட ஆசிரியையான பிரபாவதிக்கு, மாநில அரசின், நல்லாசிரியர் விருது கிடைத்துள்ளது.
பெலகாவி மாவட்டம், அகசாகி கிராமத்தை சேர்ந்த பெற்றோர் பாலப்பா - பார்வதி ஆகியோர், விவசாய தம்பதி. பள்ளி படிப்பை முடித்ததும், பெலகாவியில் பி.கே. கல்லுாரியில் பட்டப்படிப்பும், வடகவியில் மராத்தி ஆசிரியர் பயிற்சி கல்லுாரியில் டி.சி.எச்., படிப்பையும் முடித்தேன். 1992ல் மராத்தி ஆசிரியராக நியமிக்கப்பட்டேன்.
அரசு துவக்க பள்ளியில், 22 ஆண்டுகள் பணியாற்றினேன். 2016ல், ஜாபர்வாடி மராத்தி உயர் துவக்கப்பள்ளிக்கு மாற்றப்பட்டேன். 2022ல் இதே பள்ளியின் தலைமை ஆசிரியையாக நியமிக்கப்பட்டேன். 33 ஆண்டுகள் பணியாற்றிய நான், இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஓய்வு பெற உள்ளேன்.

