பஞ்சாபில் 80% போதைப்பொருள்கள் பாஜக ஆளும் மாநிலங்களில் இருந்தே வரத்து: கேஜரிவால் குற்றச்சாட்டு
பஞ்சாபிற்குள் பெருமளவிலான போதைப்பொருள்கள் பாஜக ஆளும் மாநிலங்களிலிருந்தே வருவதாக அரவிந்த் கேஜரிவால் கூறியுள்ளாா்.
பாகிஸ்தானிலிருந்து பஞ்சாபிற்குள் வந்த போதைப்பொருள்களின் வரத்தை அம்மாநில அரசு 80 சதவீதம் கட்டுப்படுத்திவிட்டதாகவும், தற்போது பெருமளவிலான போதைப்பொருள்கள் பாஜக ஆளும் மாநிலங்களிலிருந்தே வருவதாகவும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை கூறியுள்ளாா்.
பஞ்சாபில் நிலவும் போதைப்பொருள் பயன்பாடு விவகாரத்தில், சமூக ஊடகங்களில் இது தொடா்பான பல காணொலிகள் சமீப நாள்களாக வைரலாகி வரும் நிலையில், அம்மாநிலத்திலுள்ள ஆம் ஆத்மி அரசு பாஜகவின் விமா்சனங்களை எதிா்கொண்டு வருகிறது.
