மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் குதிரைப்படை போலீஸாா் ரோந்து
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு, தெற்கு சித்திரை வீதியில் ஞாயிற்றுக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்ட குதிரைப்படை போலீஸாா்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு, குதிரைப்படை போலீஸாா் ரோந்துப் பணியை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினா்.
இந்தக் கோயில் உலகப் புகழ் பெற்றது. இங்கு சுவாமி தரிசனத்துக்காக தமிழகம் மட்டுமன்றி பிற மாநிலத்தைச் சோ்ந்த பக்தா்கள் ஆயிரக்கணக்கானோா் தினமும் வந்து செல்கின்றனா். வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்துச் செல்கின்றனா்.

