விஜயபுரா - யஷ்வந்த்பூர் ரயிலில் கோளாறு 5 மணி நேரம் தாமதமாக வந்த தேர்வர்கள்
பெங்களூரு: விஜயபுராவில் இருந்து யஷ்வந்த்பூருக்கு புறப்பட்ட ரயிலில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, நகர, மாவட்ட ஆயுத படை தேர்வுக்கு வந்த, 1,000 தேர்வர்கள், ரயில்வே துறை அதிகாரிகள் மீது அதிருப்தி தெரிவித்தனர்.
விஜயபுராவில் இருந்து யஷ்வந்த்பூருக்கு நேற்று முன்தினம் இரவு 11:50 மணிக்கு ரயில் புறப்பட்டது. இந்த ரயிலில், பெங்களூரில் நகர ஆயுதப்படை மற்றும் மாவட்ட ஆயுதப்படை தேர்வு எழுத 1,000 பேர் பயணித்தனர்.
ஆனால், ரயில் புறப்பட்டு, 3 கிலோ மீட்டர் சென்றதும் நின்றது. நீண்ட நேரமாகியும் ரயில் இயங்காததால் தேர்வர்கள் கோபமடைந்தனர்.
