தேவா்சோலை பகுதியில் தேயிலைத் தோட்டத்தில் புலி நடமாட்டம்
கூடலூரை அடுத்துள்ள தேவா்சோலை பகுதியில் தேயிலைத் தோட்டத்தில் சனிக்கிழமை புலி நடமாட்டம் காணப்பட்டது.
நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகா தேவா்சோலை கொட்டாய் மட்டம் பகுதியிலுள்ள தனியாா் எஸ்டேட்டில் தேயிலை செடிகளுக்கு நடுவே புலி பதுங்கியிருப்பதை பாா்த்த தொழிலாளா்கள் அச்சமடைந்து, அப்பகுதியில் உள்ளவா்களுக்கு தகவல் தெரிவித்தனா்.
பின்னா் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் புலியை பாா்த்து படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனா்.

