இந்துத்துவ ஆதரவாளர் மீது நடவடிக்கை கோரி சிஜேபி போராட்டம்!
ஜந்தர் மந்தரில் சிஜேபி ஆதரவாளர்கள் போராட்டம் பற்றி..
ஜந்தர் மந்தரில் சிஜேபி போராட்டத்தின்போது சிஜேபி அமைப்பைச் சேர்ந்த நிஷு ஆசாத் என்பவரின் தந்தையான சஞ்சய் குமாரைத் தாக்கிய இந்துத்துவ ஆதரவாளரும் சமூக ஊடகப் பிரபலமுமான ஸ்வதந்த்ர பரத்வாஜ் மீது நடவடிக்கை கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சமூக ஊடகப் பிரபலமுமான ஸ்வதந்த்ர பரத்வாஜ், சஞ்சய் குமாரைத் தாக்கியதாகக் கூறிய நேர்காணல் இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டதைத் தொடர்ந்து இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
நாடாளுமன்ற வீதியின் காவல் நிலையத்திற்கு அருகே சிஜேபியினர் திரண்டுள்ளனர். பரத்வாஜ் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தில்லி காவல்துறை தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ள சிஜேபி, சஞ்சய்க்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.


/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)