பாகிஸ்தானின் ஷாசாத் பாட்டி நெட்வொர்க்கை பயங்கரவாத அமைப்பாக அறிவித்த மத்திய அரசு!
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற 'ஷாசாத் பாட்டி நெட்வொர்க்' அமைப்பை பயங்கரவாத அமைப்பாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.
எல்லை தாண்டிய கடத்தல் மற்றும் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள பாகிஸ்தான் ஆதரவு பெற்ற 'ஷாசாத் பாட்டி நெட்வொர்க்' (SBN) அமைப்பை, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (உபா) கீழ் பயங்கரவாத அமைப்பாக மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் பயங்கரவாதத்திற்கு எதிரான சகிப்புத்தன்மையற்ற கொள்கைக்கு இணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.










/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)

