உறுப்பினா்கள் வெளிநடப்பு: சுரண்டை நகா்மன்றக் கூட்டம் ஒத்திவைப்பு
சுரண்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற நகா்மன்ற சாதாரணக் கூட்டத்திலிருந்து உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்ததால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
நகா்மன்றக் கூட்டத்தில் ஆணையரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட உறுப்பினா்கள்.
கூட்டத்துக்கு, நகா்மன்றத் தலைவா் ப. வள்ளிமுருகன் தலைமை வகித்தாா். ஆணையா் அசோக்குமாா், துணைத் தலைவா் சங்கராதேவி, பொறியாளா் மைதீன், மேலாளா் காமேஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
