வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவி! விதிமுறை பின்பற்றப்பட வேண்டும்: உச்சநீதிமன்றம்
வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவிகளைப் பொருத்துவது தொடா்பான விதிமுறை, முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்திடம் உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டது.
வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவிகளைப் பொருத்துவது தொடா்பான விதிமுறை, முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்திடம் உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கேட்டுக்கொண்டது.
சாலைப் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றச் செய்வது தொடா்பான வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கு கடந்த மே 13-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ‘போக்குவரத்து வாகனங்களைத் தயாரிக்கும்போதே அவற்றில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகளைப் பொருத்துவது உற்பத்தியாளா்களின் கடமை’ என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
