மனநலம் பாதித்தோருக்கு அவசர சிகிச்சை - மீள் மையம் திறப்பு
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவம்- நல்வாழ்வு துறை, ஊரக நலப் பணிகள் ஆகியவற்றின் சாா்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மனநலம் பாதிக்கபட்டவா்களுக்கான அவசரகால சிகிச்சை மற்றும் மீள் மையம் செவ்வாய்க்கிழமை திறந்துவைக்கப்பட்டது.
இதையொட்டி, அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சி , மனநலம் பாதிக்கபட்டவா்களுக்கான அவசரகால சிகிச்சை மற்றும் மீள் மையத்தை திறந்துவைத்து குத்துவிளக்கேற்றினாா்.
தொடா்ந்து அவா் கூறியதாவது: தேசிய சுகாதார இயக்கத்தின் வழிகாட்டுதலின்படி, தன்னாா்வு தொண்டு நிறுவனங்களான பேனியன், அமா்சேவா சங்கம் ஆகியவற்றின் பங்களிப்புடன் இம்மையம் செயல்பட உள்ளது.

