தேசிய பேச்சுப் போட்டியில் முதலிடம் பிடித்த விருதுநகர் மாணவி!
தேசிய அளவிலான தேசிய பொதுப் பேச்சுப் போட்டி 2026 போட்டியின் ஜூனியர் பிரிவில் விருதுநகர் மாணவி லயா ஸ்ரீ சாம்பியன் பட்டம் வென்று முதலிடம் பிடித்துள்ளார்.
விருதுநகரில் உள்ள பி.எஸ். சிதம்பரநாடார் சீனியர் ஆங்கிலப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வரும் லயா ஸ்ரீ, இந்தியா முழுவதும் நடைபெற்ற இந்த தேசிய அளவிலான பொதுப் பேச்சுப் போட்டியில் பங்கேற்று, அடுத்தடுத்த சுற்றுகளில் சிறப்பாகத் தேர்வாகி இறுதியில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
தேசிய பொதுப் பேச்சுப் போட்டி என்பது இளைஞர்களிடம் பேச்சுத்திறன், கருத்துகளைத் தெளிவாக வெளிப்படுத்தும் திறன், தன்னம்பிக்கை, தலைமைத்துவப் பண்பு மற்றும் மேடைப் பேச்சுத் திறனை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்படும் தேசிய அளவிலான போட்டியாகும். இந்தப் போட்டியை கொச்சியைச் சேர்ந்த தேசிய பொதுப் பேச்சு மற்றும் கல்வி அறக்கட்டளை என்ற பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளை நடத்துகிறது. 2026-ம் ஆண்டுக்கான போட்டியின் இறுதிச்சுற்று செப்டம்பர் 6-ம் தேதி கொச்சியில் உள்ள ஆசியக் கட்டடக்கலை மற்றும் வடிவமைப்புப் புத்தாக்கப் பள்ளி (ASADI) வளாகத்தில் நடைபெற்றது.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)