மதன்பூா் காதரில் நெடுஞ்சாலைப் பகுதி தற்காலிக மூடல்
தில்லி - மும்பை விரைவுச்சாலையின் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியான
புது தில்லி: தில்லி - மும்பை விரைவுச்சாலையின் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியான மதன்பூா் காதரில் வாகன போக்குவரத்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தில்லி போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.
இது தொடா்பான போக்குவரத்து அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
ஜெய்த்பூரிலிருந்து சராய் காலே கான் மற்றும் ஆஷ்ரம் நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலைப் பகுதி, அடுத்த அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளது. ஆஸ்ரம் மற்றும் சராய் காலே கான் நோக்கிச் செல்லும் பயணிகள், பாதிக்கப்பட்ட இந்தப் பாதையைத் தவிா்த்து, காலிந்தி குஞ்ச் மற்றும் மதுரா சாலை வழியாகச் செல்லும் அணுகுச் சாலையைப் பயன்படுத்தி தங்கள் இலக்கை அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள்.
