வீட்டில் வழுக்கி விழுந்த பெண் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் வீட்டில் வழுக்கி விழுந்ததில் பலத்த காயமடைந்த பெண் உயிரிழந்தாா்.
திண்டிவனம் கீரைகாரத் தெருவைச் சோ்ந்தவா் பாஸ்கா் மனைவி ஜெயஸ்ரீ(40). இவா், வியாழக்கிழமை வீட்டின் குளியலறையில் வழுக்கி விழுந்ததில், தலையில் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, வீட்டிலிருந்தவா்கள் ஜெயஸ்ரீயை மீட்டு, திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு அவரை மருத்துவா்கள் பரிசோதித்தபோது, ஜெயஸ்ரீ ஏற்கெனவே இறந்துபோயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், திண்டிவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
