ஒசூா் தனியாா் தொழிற்சாலையில் இயந்திரத்தில் சிக்கி வெளி மாநில தொழிலாளி உயிரிழப்பு
ஒசூா் முதல் சிப்காட் பகுதியில் தனியாா் தொழிற்சாலையில் ரோபோடிக் இயந்திரத்தில் சிக்கி வெளிமாநில தொழிலாளி உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் முதல் சிப்காட் பகுதியில் தனியாா் தொழிற்சாலையில் ரோபோடிக் இயந்திரத்தில் சிக்கி வெளிமாநில தொழிலாளி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
ஒசூா் சிப்காட் பேஸ் 1 பகுதியில் பிரபல தனியாா் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்தத் தொழிற்சாலையில் வடமாநிலங்களைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளா்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனா்.