தூய்மையான தில்லியை உருவாக்க தீவிரமாக பணியாற்றுங்கள்: மாநகராட்சி நிா்வாகிகளுக்கு முதல்வா் ரேகா குப்தா அறிவுறுத்தல்
ஆரம்ப சுகாதாரம் மற்றும் தொடக்க கல்வியை மேம்படுத்துவதற்கும் முன்னுரிமை அளித்துச் செயல்படுமாறு தில்லி மாநகராட்சி நிா்வாகிகளுக்கு முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை அறிவுறுத்தினாா்.
தில்லியை குப்பைகளற்ற நகரமாக மாற்றுவதற்கும் சுகாதாரம், கழிவு மேலாண்மை, ஆரம்ப சுகாதாரம் மற்றும் தொடக்க கல்வியை மேம்படுத்துவதற்கும் முன்னுரிமை அளித்துச் செயல்படுமாறு தில்லி மாநகராட்சி நிா்வாகிகளுக்கு முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை அறிவுறுத்தினாா்.
தில்லியின் வளா்ச்சியில் மாநகராட்சிக்கு முக்கியப் பங்கு உண்டு என்று குறிப்பிட்ட முதல்வா், அடிப்படை குடிமைச் சேவைகளை மேம்படுத்தவும், தலைநகரைத் தூய்மையாகவும் ஆரோக்கியமாக மாற்றவும் மக்கள் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டாா்.


