மாநகருக்குள் ஒரு சுற்றுலா கனவு
ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போல மலைகளுக்கு நடுவே திருப்பூர், ஆண்டிபாளையம் குளம் இல்லை. சுற்றுலாப் பயணிகள் கூட்டம் நிரம்பும் முக்கிய நெடுஞ்சாலையோரமும் இல்லை.
பின்னலாடை நகரமான திருப்பூரின் நகர்ப்புறத்துக்குள்ளேயே அமைந்திருக்கும் இந்த நீர்நிலை, இப்போது உள்ளூர் மக்களின் வார இறுதி சுற்றுலா தலமாக மாறி வருகிறது.
திருப்பூரில் இருந்து 10 கி.மீ., தொலைவில் அமைதியான சூழலில் இருக்கும் ஆண்டிபாளையம் குளம், வார இறுதி நாட்களில் குடும்பங்களின் வருகையால் களைகட்டும்.


