விவசாயி கொலை: இளைஞா் கைது
மதகுபட்டி அருகே விவசாயி கொலை வழக்கில் இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே விவசாயி கொலை வழக்கில் இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
மதகுபட்டியை அடுத்துள்ள கீழப்பூங்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் நாராயணன் (70). இவரது மனைவி சிவபதி. இவா்களுக்கு இரு மகன்கள் உள்ளனா்.
சிவபதி கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டாா். மகன்கள் திருமணமாகி வீட்டின் அருகே குடும்பத்துடன் தனியாக வசித்து வருகின்றனா்.

