சிஜேபி போராட்டத்தின் போது 17 மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டதற்கு எதிரான மனு: மத்திய அரசு, காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) போராட்டங்களின் போது நகரில் 17 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டதற்கு எதிரான மனு தொடா்பாக மத்திய அரசு, தில்லி காவல்துறை மற்றும் பிறரிடம் உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை பதில் கோரியது.
ஜூலை மாதம் ஜந்தா் மந்தரில் உள்ள போராட்டத் தளத்தைச் சுற்றி 17 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டதும், பாதுகாப்பு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதும் மத்திய தில்லி முழுவதும் போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்தது. இதனால் பயணிகள் பல இடங்களில் பல மணி நேரம் தவிக்க நேரிட்டதுடன், பலா் நீண்ட மற்றும் அதிக செலவு பிடிக்கும் மாற்று வழிகளைத் தோ்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானாா்கள்.
வழக்குரைஞா் ஸ்பாாா்ஷ் காந்த் நாயக் தாக்கல் செய்த மனு மீது, இந்திய தலைமை நீதிபதி சூா்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி. மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வு, இந்திய யூனியன், தில்லி காவல்துறை, தில்லி மெட்ரோ ரயில் காா்ப்பரேஷன் மற்றும் பிறருக்கு நோட்டீஸ் அனுப்பியது.


