பார்க்கிங் இன்றி கட்டப்படும் வணிக வளாகங்களால் நெருக்கடி: சாலையோரம் நிறுத்தும் வாகனங்களால் பாதிப்பு
சாத்துார்; விருதுநகர் மாவட்டத்தில் வணிக வளாகங்கள் பார்க்கிங் வசதி இன்றி கட்டப்படுவதால் இங்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்களை ரோட்டில் நிறுத்தும்போது நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சிவகாசி மாநகராட்சி, சாத்துார், விருதுநகர், ராஜபாளையம், அருப்புக்கோட்டை, உள்ளிட்ட நகராட்சி பகுதிகளிலும் நகரை ஒட்டியுள்ள ஊராட்சி பகுதிகளிலும் நாளுக்கு நாள் புதிதாக வணிக வளாங்கள், சூப்பர் மார்க்கெட்டுகள் என புதிய கட்டடங்கள் கட்டப்படுகின்றன.
நகரின் முக்கிய வீதிகளில் ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடைகள் கட்டும்போதே பார்க்கிங்குக்காக தனியாக இடம் ஒதுக்கிட வேண்டும். ஆனால் பார்க்கிங்குக்கு இடம் ஒதுக்காமல் கட்டடம் கட்டி திறக்கப் படுவதால் இந்த வணிக வளாகங்களுக்கு வரும் வாகன ஓட்டிகள் ரோட்டில் வாகனங்களில் நிறுத்திவிட்டு கடைகளுக்கு செல்லும் நிலை உள்ளது.

