உருவெடுக்குமா?
பஞ்சாபில் பா.ஜ., முக்கிய அரசியல் சக்தியாக... சவால் அளிக்க காத்திருக்கும் எதிர்க்கட்சிகள்
– சிறப்பு நிருபர் –: பஞ்சாப் சட்டசபைத் தேர்தலுக்கு, இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில், மாநில அரசியல் களம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. தற்போது பஞ்சாபை ஆளும் ஆம் ஆத்மி கட்சி, மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதற்கு போட்டியாக, இந்தத் தேர்தலில் தனித்து களமிறங்க பா.ஜ., முடிவு செய்துள்ளது. ஆம் ஆத்மி கட்சிக்கு எதிரான எதிர்ப்பு அலைகளை, தனக்கு சாதகமாக பயன்படுத்தி, முக்கிய அரசியல் சக்தியாக பா.ஜ., உருவெடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பஞ்சாபில், முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, 117 சட்டசபைத் தொகுதிகளுக்கும் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தேர்தல் நடக்க உள்ளது. இன்னும் ஆறு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், மாநில அரசியல் கட்சியினர் தங்கள் அமைப்புகளை வலுப்படுத்தி, வாக்காளர்களை அணுகும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்

