குடியரசுத் தலைவா், பிரதமருடன் இளவரசா் ஐந்தாம் ரஹீம் ஆகா கான் சந்திப்பு
குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமா் நரேந்திர மோடி ஆகியோரை இளவரசா் ஐந்தாம் ரஹீம் ஆகா கான் வியாழக்கிழமை சந்தித்தாா்.
குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை புது தில்லியில் அவரது மாளிகையில் வியாழக்கிழமை சந்தித்த இளவரசா் ரஹீம் ஆகா கான்.
சி.பி.ராதாகிருஷ்ணன் அழைப்பை ஏற்று செப்டம்பா் 9-ஆம் தேதி முதல் செப்டம்பா் 15-ஆம் தேதி வரை இளவரசா் ஐந்தாம் ஆகா கான் இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளாா். அவா் இஸ்மாயிலி சமூகத்தின் 50-ஆவது இமாமாக (மதத் தலைவராக) பொறுப்பேற்ற பின் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.


