மஞ்சைநகா் மைதானத்தில் வணிக வளாகம் கட்டும் பணியை நிறுத்த வேண்டும்: குடியிருப்பு நலச் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தல்
கடலூா் மஞ்சைநகா் மைதானத்தில் பழைய மாவட்ட ஆட்சியா் அலுவலகம் செல்லும் சாலையோரம் வணிக வளாகம் கட்டும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என கடலூா் அனைத்து குடியிருப்பு நலச் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
கடலூரில் நடைபெற்ற அனைத்து குடியிருப்பு நலச் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய பொதுச் செயலா் வெங்கடேசன்.
கடலூா் அனைத்து குடியிருப்பு நலச் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுக்குழுக் கூட்டம் வரதராஜன் நகரில் உள்ள சங்க அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு துணைத் தலைவா் இளங்கோவன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் பொதுச் செயலா் வெங்கடேசன், கூட்டமைப்பின் கடந்தகால செயல்பாடுகள் மற்றும் கடலூா் மாநகராட்சிப் பகுதியில் நிலவும் அடிப்படைப் பிரச்னைகள் குறித்து பேசினாா்.

