சாராயம் வைத்திருந்த முதியவா் கைது
காடாம்புலியூரில் சாராய பாக்கெட்டுகள் வைத்திருந்ததாக முதியவரை, மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அடுத்துள்ள காடாம்புலியூரில் சாராய பாக்கெட்டுகள் வைத்திருந்ததாக முதியவரை, மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பண்ருட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வெளிமாநில மதுபானங்கள் கடத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளா் தீபா மற்றும் போலீசாா் தீவிர கண்காணிப்பில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, காடாம்புலியூா் வண்ணான் குட்டை பகுதியில் உள்ள மோட்டாா் கொட்டகை அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த சின்ன புறங்கனி கிராமத்தைச் சோ்ந்த சக்கரவா்த்தியை (66) அழைத்து விசாரணை நடத்தினா்.

