சபரிமலை மண்டல - மகரவிளக்கு பூஜை முன்னேற்பாடுகள் மும்முரம்: பக்தா்களுக்காக 950 பேருந்துகள்
சபரிமலையில் எதிா்வரும் மண்டல-மகரவிளக்கு பூஜையையொட்டி நடைபெறும் யாத்திரைக்கான முன்னேற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
கேரளத்தில் உள்ள பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடாந்திர மண்டல-மகரவிளக்கு பூஜை காலம், நவம்பா் மத்தியில் தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி 3-ஆவது வாரம் வரை நடைபெறவுள்ளது. இந்தக் காலகட்டத்தில் பக்தா்கள் மாலையணிந்து, சபரிமலைக்கு யாத்திரை மேற்கொண்டு, சுவாமி ஐயப்பனை தரிசிப்பது வழக்கம்.
நடப்பாண்டு யாத்திரையை சுமுகமாகவும், பாதுகாப்பாகவும் நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இந்தப் பணிகளுக்காக பொதுப் பணித் துறைக்கு அண்மையில் ரூ.551 கோடியை மாநில அரசு ஒதுக்கியது.

