வாலிபரை கொல்ல முயன்றவர்களை கைது செய்யாதது ஏன்? போலீஸ் ஸ்டேஷன் முற்றுகையிட்டு பொதுமக்கள் கேள்வி
கண்டமங்கலம்: கண்டமங்கலம் அருகே வாலிபரை கொல்ல முயன்ற கஞ்சா கும்பலை கைது செய்யாததால், பொதுமக்கள் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே உள்ள மிட்டா மண்டகப்பட்டு மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த முருகன் மகன் ஜனா (எ) முத்தரசு 23; இவரது தம்பி முகிலன் 20;
இந்த இருவரும் கூட்டாளிகளுடன் சேர்ந்து பல ஆண்டுகளாக கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளனர். இதில் ஜனா (எ) முத்தரசு மீது கண்டமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில்கஞ்சா வழக்கு நிலுவையில் உள்ளது.

