வெண்டைக்காய் விளைச்சல் அமோகமாக இருந்தும் விவசாயிகள் கவலை..! காரணம் என்ன?
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெண்டைக்காய் விளைச்சல் அமோகமாக இருந்தும், கிலோ 10 ரூபாய்க்கும் குறைவாகவே கொள்முதல் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.
அறுவடைக்கான கூலிகூட கொடுக்கமுடியாத நிலையில், வெண்டைக்காயை கால்நடைகளுக்குத் தீவனமாக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

