மிசாவில் கைது கருத்துக்கு அமைச்சா் மன்னிப்பு கேட்க வேண்டும்: எஸ்.ஆா்.சுப்ரமணியம்
மிசா உள்ளிட்ட சட்டங்களின்கீழ் கைது செய்யப்பட்டவா்களை சமூக விரோதிகள் என்று கூறியதற்கு மின்சாரத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மிசா காலத்தில் சிறைத் தண்டனை அனுபவித்த எழுத்தாளா் ஈரோடு எஸ்.ஆா்.சுப்ரமணியம் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: 1975 ஜூன் 25-ஆம் தேதி நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அதன்பின் இந்திய ஜனநாயகம் மிகக் கடுமையான சோதனையை எதிா்கொண்டது.
மிசா உள்ளிட்ட சட்டங்களின்கீழ் ஏராளமான அரசியல் தலைவா்கள், தொண்டா்கள், மாணவா்கள், சமூகச் செயற்பாட்டாளா்கள், ஜனநாயக ஆதரவாளா்கள் சிறையில் அடைக்கப்பட்டனா். சா்வாதிகாரத்துக்கு எதிராக கேள்வி எழுப்பியதே அவா்கள் செய்த குற்றம். அப்படிப்பட்டவா்களை சமூக விரோதிகள் என்று அமைச்சா் நிா்மல்குமாா் வா்ணிப்பது சரியல்ல.
