முழுமையாக மாறிடுமோ?
'பஞ்சாபில் சட்டசபை தேர்தல் நடக்கிறதா அல்லது ராஜஸ்தானில் நடக்கிறதா என தெரியவில்லை...' என, நகைச்சுவையுடன் கூறுகின்றனர், பஞ்சாப் மாநில மக்கள்.
பஞ்சாபில், முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. இங்கு, அடுத்தாண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. பா.ஜ.,வும், காங்கிரசும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன.
பா.ஜ.,வுக்கான தேர்தல் பொறுப்பாளராக, பா.ஜ., ராஜஸ்தான் முன்னாள் தலைவர் சதீஷ் புனியாவும்; காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளராக, காங்., ராஜஸ்தான் முன்னாள் தலைவர் சச்சின் பைலட்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

