பிஷ்கெக்கில் உயர்ந்த குரல்!
பல்வேறு நாடுகள் இணைந்து செயல்படும் சர்வதேச அமைப்புகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கு (எஸ்சிஓ) மிகுந்த முக்கியத்துவம் உள்ளது. 1996-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பு அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பை மையமாகக் கொண்டதாகும். ஐரோப்பா மற்றும் ஆசியாவை உள்ளடக்கிய யூரேசியாவில் எஸ்சிஓ தவிர்க்க முடியாத வலுவான சக்தி.
சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷியா, தஜிகிஸ்தான் ஆகிய ஐந்து நாடுகளுடன் "ஷாங்காய் ஃபைவ்' என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, 2001-இல் எஸ்சிஓவாக மாற்றப்பட்டது; அதில் கூடுதலாக உஸ்பெகிஸ்தான் இணைந்தது.
இந்தியாவும், பாகிஸ்தானும் 2017-இல் இந்த அமைப்பில் இணைந்தன. ஈரான் 2023-லும், பெலாரஸ் 2024-லும் இணைய, இப்போது 10 உறுப்பு நாடுகளுடன் செயல்பட்டு வருகிறது.

