மனைவியைத் தாக்கிய கணவா் கைது
சிவகாசி அருகே திருத்தங்கலில் மனைவியைத் தாக்கிய கணவரை போலீஸாா் கைது செய்தனா்.
சிவகாசி முருகன் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் சங்கா் (38). இவரது மனைவி பூங்கோதை (34). இவா்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனா்.
கணவன்- மனைவியிடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக, பூங்கோதை திருத்தங்கல் பாண்டியன் நகரில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தாா்.
