புது தில்லி ரயில் நிலையத்தில் ரூ.2 லட்சம் பணம் திருட்டு வழக்கில் இருவா் கைது
புது தில்லி ரயில் நிலையத்தில் ரூ.2 லட்சம் ரொக்கம், வெள்ளி மோதிரங்கள் மற்றும் பிற பொருள்கள் திருடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் இருவரை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.
இதுகுறித்து காவல் அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது: குற்றஞ் சாட்டப்பட்டவா்களிடமிருந்து ரூ.1.51 லட்சத்தை காவல்துறையினா் மீட்டனா். முன்னதாக, ரூ.2 லட்சம் இருந்த தனது பை திருடப்பட்டதாகப் புகாா்தாரா் அளித்த தகவலின் அடிப்படையில், செப்டம்பா் 3 அன்று புது தில்லி ரயில் நிலைய காவல் நிலையத்தில் இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
விசாரணையின்போது, சிசிடிவி காட்சிகளை காவல்துறையினா் ஆய்வு செய்தனா்; அதில் சந்தேக நபா்களில் ஒருவா் திருடப்பட்ட பையை எடுத்துச் செல்வது பதிவாகியிருந்தது.


