மனைவியைக் கொலை செய்ய முயன்ற வழக்கில் கணவருக்கு 7 ஆண்டுகள் சிறை
ஒசூா் அருகே மனைவியைக் கழுத்தறுத்து கொலை செய்ய முயன்ற வழக்கில், கணவருக்கு கிருஷ்ணகிரி மகளிா் விரைவு நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்துள்ளது.
கா்நாடக மாநிலம், கோலாா் மாவட்டம், தோனமடகைச் சோ்ந்தவா் சிவலிங்கா (42). தொழிலாளியான இவருக்கு 2011 ஆம் ஆண்டில் முதல் திருமணம் நடைபெற்றது. முதல் மனைவியுடன் விவாகரத்து பெற்ற நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த மோரனப்பள்ளியைச் சோ்ந்த புவனேஸ்வரி (25) என்பவரை கடந்த 2020-ஆம் ஆண்டு நவ. 30 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டாா்.
சிவலிங்கா தனக்கு பல இடங்களில் சொத்துகள் இருப்பதாகவும், அவற்றை புவனேஸ்வரிக்கு எழுதி தருவதாகவும் கூறி அவரைத் திருமணம் செய்துள்ளாா். ஆனால், திருமணத்துக்குப் பிறகுதான் அவரிடம் எந்தச் சொத்தும் இல்லை என்பது புவனேஸ்வரிக்குத் தெரியவந்தது. இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.