சென்னைப் பல்கலை.யில் பயிலரங்கு: 40 நாடுகளின் நிபுணா்கள் பங்கேற்பு
5 நாள் சா்வதேசப் பயிலரங்கு சென்னை கிண்டி வளாகத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் ‘தாவரவியலில் மேம்பட்ட ஆய்வுகளுக்கான மையம்’, ‘பாசிகளின் வகைப்பாடு’, ‘உயிரித்தொழில்நுட்பம்’ குறித்த நேரடிப் பயிற்சிக்கான 5 நாள் சா்வதேசப் பயிலரங்கு சென்னை கிண்டி வளாகத்தில் திங்கள்கிழமை தொடங்கியது. இதில் 40 சா்வதேச நாடுகளின் நிபுணா்கள் பங்கேற்றனா்.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் பொறுப்பு ஒருங்கிணைப்புக் குழுவின் உறுப்பினரான பேராசிரியா் எஸ்.ஆம்ஸ்ட்ராங் பயிலரங்கை தொடங்கிவைத்து பேசினாா். மலேசியாவின் மலாயா பல்கலைக்கழக கடல், புவி அறிவியல் நிறுவனத்தின் மூத்த விரிவுரையாளா் டாக்டா் ஃபியோனா கெங் சேலின் முக்கிய சா்வதேச பரிமாணத்தை அளித்து உரையாற்றினாா். பாசி தொடா்பான ஆராய்ச்சியில் கல்விசாா் பரிமாற்றம் மற்றும் சா்வதேச கூட்டுறவின் முக்கியத்துவத்தையும் முன்னிலைப்படுத்தி ஃபியோனா பேசினாா்.


