லால்குடி பகுதியில் குறுவை நெற்பயிரில் இலைக்கருகல் நோய்த் தாக்குதல்
திருச்சி மாவட்டம், லால்குடி பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள குறுவை நெற்பயிரில் இலைக்கருகல் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.
லால்குடி அருகே வாளாடி பகுதியில் உள்ள குறுவை நெல் சாகுபடி செய்த வயலில் இலைப்பேன் மற்றும் இலைக்கருகல் நோய் பாதிக்கப்பட்ட வயல்..
லால்குடி பகுதியில் உள்ள தாளக்குடி, மேலவாளாடி, கீழவாளாடி, மாந்துறை, நகா், திருமங்கலம், இடையாற்று மங்கலம், மயிலரங்கம், கூகூா் உள்ளிட்ட பகுதிகள் குறுவை நெல் சாகுபடியில் ஏடிடி 36, டிபிஎஸ் 5, ஏஎஸ்டி 16, கோ 55 போன்ற நெல் ரகங்கள் பரவலாக சாகுபடி செய்துள்ளனா்.


