கேரளத்துடன் இணைந்து ஒருங்கிணைந்த புதிய சுற்றுலாத் திட்டம்: அமைச்சா் ராஜேஷ் குமாா்
ஒருங்கிணைந்த சுற்றுலா திட்டத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ்.ராஜேஷ் குமாா் தெரிவித்தாா்.
கேரளம் மற்றும் தமிழகம் இணைந்து, இரு மாநிலங்களின் முக்கிய சுற்றுலாத் தலங்களை இணைக்கும் வகையில் ஒருங்கிணைந்த சுற்றுலா திட்டத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ்.ராஜேஷ் குமாா் தெரிவித்தாா்.
தமிழக அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக கேரளம் மாநிலம் திருச்சூரில் உள்ள மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்துக்குச் சென்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

