பிரிட்டனில் தொழில்நுட்பக் கோளாறால் விமான நிலையங்கள் முடக்கம்; 600க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து
லண்டன்: பிரிட்டனில் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாடு முழுவதும் 600க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
பிரிட்டன் வான்வழி போக்குவரத்துட்டுப்பாட்டு அமைப்பில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. லண்டன் ஹீத்ரோ, காட்விக், ஸ்டான்ஸ்டெட் , மான்செஸ்டர் மற்றும் ஸ்காட்லாந்து விமான நிலையங்கள் பாதிக்கப்பட்டன.
புறப்பட வேண்டிய விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. வருகை தரும் விமானங்கள் வழக்கம்போல் இயங்கின. ஆனாலும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, இதுவரை 625 விமானங்கள் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளன. தங்கள் விமானங்கள் ரத்து செய்யப்படுவதற்கு முன்பு, பல மணிநேரம் விமானத்திலேயே சிக்கி தவித்ததாக பல பயணிகள் தெரிவித்தனர்.


/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)





